தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்

Update: 2018-10-03 17:32 GMT
சென்னை, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் கடந்த சில வாரங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அவர் மீண்டும் நேற்று மாலை மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

பின்னர் அவருக்கு ரத்த சுத்திகரிப்பு (டயாலீசஸ்) செய்தனர். இந்த சிகிச்சைக்கு பிறகு  விஜயகாந்த் வீடு திரும்பினார்.

மேலும் செய்திகள்