நன்னிலம், வலங்கைமான், குடவாசல் ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் சன்னரக நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ெரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் நெல்மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ெரயிலின் 42 வேகன்களில் ஏற்றினர். அதனை தொடர்ந்து அரவைக்காக காஞ்சீபுரத்திற்கு நெல்மூட்டைகள் சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது.