மோட்டார் சைக்கிளில் சென்று பணம் பறித்த கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர்

நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்று பணம் பறித்த கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர்.

Update: 2023-05-17 18:52 GMT

நெல்லை மாநகர பகுதியில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்று நகை, பணம், செல்போன் பறித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்ற 17 மற்றும் 18 வயது உடைய 2 பேர் அந்த வழியாக சென்ற நபரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்