மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-24 13:27 GMT

ஆம்பூர் அருகே உமராபாத் பள்ளித்தெரு பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சித்தரசன் (வயது 35) மற்றும் ராதாகிருஷ்ணன் (30) என்பதும் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 250 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்