2 பேர் படுகாயம்

ஆட்டோ- கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-08-31 19:24 GMT

விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ெரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோ பாலத்தில் இருந்து கீழே விழாமல் தப்பியது. இதில் ஆட்டோ டிரைவர் விருதுநகர் நேருஜி நகரை சேர்ந்த சண்முகவேல் (வயது 44) மற்றும் காரை ஓட்டி வந்த மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்த முத்துக்கண்ணன் (25) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்