நகை, பணம் திருடிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

Update: 2023-03-02 19:30 GMT

கன்னங்குறிச்சியில் நகை, பணம் திருடிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

நகை, பணம் திருட்டு

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு மணிவண்ணனின் மனைவி சந்திரகலா (வயது 68), தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றார்.

இதை நோட்டமிட்ட கன்னங்குறிச்சியை சேர்ந்த கார்த்திக் (43), சிவானந்தம் (36) ஆகிய 2 பேர் அவரது வீட்டிற்குள் கதவுபூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 15 பவுன் நகைகள், 500 கிராம் வெள்ளிப்பொருட்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சந்திரகலா புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக், சிவானந்தம் ஆகிய 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்