அரசு ஊழியர் உள்பட 2 பேர் சாவு

தனித்தனி விபத்தில் அரசு ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-08-06 18:43 GMT

செஞ்சி, 

மேல்மலையனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 57). இவர் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம நல அலுவலராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக சாலையோரத்தில் இருந்த சிமெண்டு கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜாமணி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

விழுப்புரம் அருகே உள்ள ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராமமூர்த்தி ( 64). ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை ஊழியர். இவர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்