குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

தூத்துக்குடியில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-28 18:45 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் சுரேஷ் (வயது 35). இவர் கடந்த மாதம் 30-ந்தேதி திருச்செந்தூர் பைரவர் கோவில் பூசாரி சரவணன் (34) மற்றும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (56) ஆகியோரை முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றார். இந்த வழக்கில் அக்கோவிலில் தங்கி இருந்த சுரேசை திருச்செந்தூர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கடந்த 7-11-2022 அன்று தட்டார்மடம் தாமரைமொழி பகுதியை சேர்ந்தவர்களான முத்துபாண்டி மகன் அருண் பாண்டி (22) மற்றும் சுப்பையா மகன் சீனி (28) ஆகியோரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் அருண் பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்ற வழக்கில் உடன்குடி அருகே உள்ள தேரியூர் பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி மகன் சரத்குமார் (28) என்பவரை தட்டார்மடம் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் சுரேஷ் மற்றும் சரத்குமார் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்