நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதல் 2 பேர் காயம்

நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-09-17 19:15 GMT

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காசியாபிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி கமலா. இவர் தனது உறவினர் திருமண விழாவிற்கு சென்று விட்டு தன் உறவினர்கள் இருவருடன் திண்டுக்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிருங்காக்கோட்டையை சேர்ந்த அருண் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கமலா மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருண் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து கமலா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிங்கம்புணரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்