டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

மிலாடிநபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-26 21:02 GMT

மிலாடிநபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டுடாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) மிலாடி நபி மற்றும் வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தி ஆகிய 2 நாட்கள் மூடப்பட வேண்டும். அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.

அந்த நாளில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுபோல் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்