மண்டையூர், நீர்பழனி பகுதிகளில் 17-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

மண்டையூர், நீர்பழனி பகுதிகளில் 17-ந் தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-09-14 18:15 GMT

ஆவூர்:

தமிழ்நாடு மின்சார வாரிய மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொண்டைமான் நல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 17-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தொண்டைமான்நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், களமாவூர், காரப்பட்டு, தென்னத்திரையான்பட்டி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் 17-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளாார். 

Tags:    

மேலும் செய்திகள்