'நீட்' தேர்வை 1,654 மாணவ, மாணவிகள் எழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்த ‘நீட்’ தேர்வை 1,654 மாணவ-மாணவிகள் எழுதினர்.

Update: 2023-05-07 18:45 GMT

கொரடாச்சேரி:


திருவாரூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வை 1,654 மாணவ-மாணவிகள் எழுதினர்.

'நீட்' தேர்வு

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

5 மையங்களில் நடந்தது

அதன்படி இந்த ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள 5 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, தி டிரினிட்டி அகாடமி சி.பி.எஸ்.இ. சீனியர் பள்ளி, கேந்திரியா வித்யாலயா பள்ளி, கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளி, திருத்துறைப்பூண்டி எஸ்.வி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளி ஆகிய 5 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.

1,654 மாணவ, மாணவிகள் எழுதினர்

இந்த தேர்வை 1,654 மாணவ, மாணவிகள் எழுதினர். மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடந்த இத்தேர்வில், வழக்கம் போல கடுமையான கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டது.

தேர்வு மையத்திற்கு மாணவ-மாணவிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நேற்று காலை முதலே மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேர்வு எழுதினர்.

உடல் வெப்ப பரிசோதனை

தேர்வு மையத்திற்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லாததால் மாணவ-மாணவிகள் கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. 5 தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்