கோவிலுக்கு சென்ற போது டயர் வெடித்ததில் வேன் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்

வேடசந்தூர் அருகே கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தபோது டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-07-26 15:44 GMT

திண்டுக்கல்:

தேனி மாவட்டம் பூசாரிகவுண்டன்பட்டியைச் சேர்ந்த 16 பேர் ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நாட்ராயன் நாச்சிமுத்து கோவிலுக்கு சென்று கிடா வெட்டி வழிபாடு நடத்துவதற்காக ஒரு வேனில் புறப்பட்டுச்சென்றனர். வேனை, பூசாரிகவுண்டன்பட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (வயது32) என்பவர் ஓட்டி வந்தார்.

திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே இன்று மதியம் வேன் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சென்று நடு சாலையில் கவிழ்ந்து.

வேனை ஓட்டி வந்த பூசாரிகவுண்டன்பட்டியைச் சேர்ந்த டிரைவர் வீரக்குமார் மற்றும் வேனில் வந்த குணாவதி (52), அருண்குமார் (27), அமுதா (41), போதுமணி(52), பிரியதர்சினி (22), சர்வேஸ்வரன் (37), மாலதி (49), ஜெயந்தி (42), சீலமுத்து (54) உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்சு மூலமாக வேடசந்தூர் அரசு மருத்துவமனையக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலைத்துறை ரோந்து ஏட்டு சாமிநாதன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து நடு சாலையில் கவிழ்ந்த வேனை மீட்பு வானம் மூலம் உடனடியாக அகற்றி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்கள்.

இது குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டயர் வெடித்து கவிழ்ந்த வேன் சாலையின் மறுபக்கம் சென்று இருந்தால் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி பெரிய விபத்து ஏற்ப்பட்டிருக்கும். அதிஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்