சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 14 பேர் காயம்

தேனூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-05-03 18:42 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனூர் தேனிக்கண்மாயில் விநாயகர் கோவில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றறு. ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

இதில் 198 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 850 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

14 பேர் காயம்

காளைகள் முட்டியதில் 7 வீரர்களும், 4 மாட்டின் உரிமையாளர்கள், 3 பார்வையாளர்கள் என மொத்தம் 14 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, மிக்சி, குக்கர், கிரைண்டர், வெள்ளி நாணயங்கள், ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கண்டு களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்