12-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்

திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் வருகிற 12-ந்தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-10-07 19:45 GMT

திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலைய பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அன்றையதினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்தார்.




Tags:    

மேலும் செய்திகள்