110 லிட்டர் சாராயம் பறிமுதல்

மயிலாடுதுறையில் 110 லிட்டர் சாராயம் பறிமுதல் வாலிபர் கைது

Update: 2023-03-04 18:45 GMT

மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் பாலிதீன் பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து ஓடினார். இதனைக் கண்ட போலீசார் அவரை துரத்தி பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த சாராயம் வித்தியாசமான நெடி வீசி வீசியுள்ளது. இதனால் இந்த சாராயம் விஷ சாராயமாக இருக்கலாம் என்று கருதிய போலீசார் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து ஒரு லிட்டர் மட்டும் சோதனைக்காக எடுத்து அனுப்பி வைத்தனர். பிடிப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருவிழந்தூர் அண்ணா நகரை சேர்ந்த விஜயேந்திரன் மகன் அஜித்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்