100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணிகள் ஆய்வு

சிவகிரி அருகே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணிகளை யூனியன் தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-02 18:45 GMT

சிவகிரி:

வாசுதேவநல்லூர் யூனியன் சிவகிரி அருகே துரைச்சாமியாபுரம் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்பு பணியை வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் குறை நிறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்