1-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

1-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Update: 2023-04-28 18:45 GMT

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி வருகிற 1-ந்தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுஅருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.2 மற்றும் எப்.எல். 3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதுபானங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறி விற்பனையில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடத்தில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரிய வந்தால் மதுகூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்