மது கொடுத்து சிறுமி கூட்டு பலாத்காரம்; வீடியோ இணையதளத்தில் வெளியீடு

Girl gang-raped with alcohol; Publish on video website

Update: 2022-11-15 20:12 GMT

முசிறி:

சிறுமியுடன் பழக்கம்

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த அய்யம்பாளையம் அந்தரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் ரங்கநாதன்(வயது 33). இவர் பெயிண்டிங் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவருக்கும், 16 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ரங்கநாதன், தனது செல்போன் மற்றும் சிறுமிக்கு தேவையான சிறு சிறு பொருட்களை கொடுத்து, அந்த சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். மேலும் சிறுமி, தனது பெற்றோர் இல்லாத நேரத்தில் ரங்கநாதனின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

அவ்வாறு சென்று வந்தபோது ரங்கநாதனின் நண்பர்களான சிறுகாம்பூரை சேர்ந்த கணேசனின் மகன் மணிகண்டன்(23), ராஜமாணிக்கத்தின் மகன் தர்மா என்ற கணேசன்(28) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கும் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரும் சிறுமியுடன் பழகி வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று அவர்கள், கோட்டூர் ஆற்றுப்படுகை அருகில் உள்ள தைலமரக்காட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு மது கொடுத்துள்ளனர். பின்னர் போதையில் இருந்த சிறுமியை, ரங்கநாதன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீடியோ எடுத்தனர்

இதனை மற்ற 4 பேரும் செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இது பற்றி வெளியில் கூறினால், வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.

பின்னர் மீண்டும் சில முறை சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள், அவரது பெற்றோரிடம் அடிக்கடி சில ஆண்களுடன் சிறுமி வெளியில் செல்வது பற்றி கூறியுள்ளனர்.

திருமணம்

இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் இது பற்றி தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள், அங்கு சென்று விசாரித்து அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேருக்குள் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, ரங்கநாதன் சிறுமியுடன் இருந்த வீடியோவை இணையதளத்தில் அவரது நண்பர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், இது குறித்து காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது, சிறுமி நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார்.

3 பேர் கைது

இதையடுத்து சிறுமியின் பெற்றோர், முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன், மணிகண்டன், தர்மா என்ற கணேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்