அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

பேரளத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-03-21 18:45 GMT

நன்னிலம்:

பேரளத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல்மூட்டைகள், லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதையடுத்து அரவைக்காக நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்