மத்தியபிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

மத்தியபிரதேசத்தில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

Update: 2022-07-30 15:54 GMT

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆகப் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, போர்கேடி, நவ்தபந்த், உமாரியா, ஹரண்யகேடி ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று இந்தூர் மாவட்ட கலெக்டர் மணீஷ் சிங் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்