விஷ பழங்களை தின்ற 3 சிறுமிகள் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில், விஷ பழங்களை தின்ற 3 சிறுமிகள் பலியாகினர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் குன்னார் கோட்வாலி பகுதியை சேர்ந்தவர் திகாராம். இவருடைய மகள் கவுரா (வயது 8). இவருடைய உறவினர் குழந்தைகள் ரஜ்னா (8) மற்றும் சாக்சி (9). இவர்கள் 3 பேரும் கடந்த வாரம் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று பழங்களை பறித்து சாப்பிட்டனர். அதை வீட்டுக்கும் கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டனர்.
இந்த நிலையில் திடீர் என்று அவர்களுக்கு வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 சிறுமிகளும் பரிதாபமாக இறந்தனர்.
அவர்கள் காட்டில் பறித்து சாப்பிட்ட பழங்கள் விஷ தன்மை கொண்டவை என்பது தெரியவந்தது.
உத்தரபிரதேச மாநிலம் குன்னார் கோட்வாலி பகுதியை சேர்ந்தவர் திகாராம். இவருடைய மகள் கவுரா (வயது 8). இவருடைய உறவினர் குழந்தைகள் ரஜ்னா (8) மற்றும் சாக்சி (9). இவர்கள் 3 பேரும் கடந்த வாரம் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று பழங்களை பறித்து சாப்பிட்டனர். அதை வீட்டுக்கும் கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டனர்.
இந்த நிலையில் திடீர் என்று அவர்களுக்கு வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 சிறுமிகளும் பரிதாபமாக இறந்தனர்.
அவர்கள் காட்டில் பறித்து சாப்பிட்ட பழங்கள் விஷ தன்மை கொண்டவை என்பது தெரியவந்தது.