அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் கைது

அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-23 18:05 GMT
மதுரை, 
மதுரையை சேர்ந்தவர் வக்கீல் பசும்பொன் பாண்டியன். இவர் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தமிழக கவர்னர் ஆர். எம். ரவி குறித்து அவதூறாக பேசியதாக  போலீசார் நேற்று இரவு வக்கீல் பசும்பொன் பாண்டியனை கைது செய்தனர். முன்னதாக அவரிடம் விசாரணை நடத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திடீர்நகர் காவல் நிலையத்திற்கு பசும்பொன் பாண்டியன் அழைத்துவரப்பட்டார் இந்த தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள் திடீர் நகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்