மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-04 17:31 GMT
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டி பாலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் தனது வீட்டின் பின்புறம் வைத்து மது விற்ற அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 56) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
அதேபோல குளித்தலை அருகே உள்ள அய்யனேரி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் மது விற்ற குளித்தலை அருகே உள்ள மேல குட்டப்பட்டியை சேர்ந்த ராமன் (51) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களையும் ஒரு மொபட்டையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்