சின்னசேலம் அருகே கார் மோதி கல்லூரி மாணவி பலி

சின்னசேலம் அருகே கார் மோதி கல்லூரி மாணவி பலி

Update: 2021-10-03 17:28 GMT
சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பரிதாபேகம் (வயது 41) இவரது கணவர் நாகூர் அனிபா 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகள் மதினா(18) சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நத்தகரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.கம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.  

இந்த நிலையில் மதினா நேற்று காலை அவரது சொந்த வேலை காரணமாக கள்ளக்குறிச்சிக்கு பஸ்சில் செல்வதற்காக முருகன் கோவில் பஸ் நிறுத்தத்தில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மதினா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஹாருன்ஜான்சன்(46) என்பவர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்