உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி

உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி

Update: 2021-10-03 15:47 GMT
உடுமலை
உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நான்கு வழிச்சாலை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் இருந்து உடுமலை நகரின் வடக்குப்பகுதிகளில் உள்ள கிராம புறங்கள் மற்றும் மடத்துக்குளம் வழியாக திண்டுக்கல் வரை 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
இதன்மூலம் நகர பகுதிகளில் வாகனபோக்குவரத்துநெரிசல் தவிர்க்கப்படும் என்று கருதப்படுகிறது.இந்த சாலையின் ஒருபகுதி உடுமலை பொள்ளாச்சி சாலையில் ராகல்பாவி பிரிவு அருகே சிறிது தூரத்தில் இருந்து பிரிந்து கிராமப்புறத்தில் செல்கிறது. புதியதாக இந்த 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் ஆங்காங்கு தீவிரமாக நடந்து வருகிறது.
பொதுமக்கள்
நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். 
எனவே நான்கு வழிச்சாலை பணியை விரைந்து  முடிக்க  வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகள்