மணல் திருடிய 2 பேர் கைது

சாத்தூர் அருகே மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-02 20:26 GMT
விருதுநகர்,

சாத்தூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சத்திரப்பட்டி புதுக்காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் உரிய அனுமதியின்றி அங்குள்ள கண்மாயில் இருந்து கிராவல் மணலை ெபாக்ைலன் எந்திரம் மூலம் எடுத்து டிராக்டரில் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மணலுடன் டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து டிராக்டர் டிரைவர் பொன்னுச்சாமி (வயது 27), பொக்லைன் எந்திர டிரைவர் கார்த்திக் (34) ஆகிய 2 ேபரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்