மதுவிற்ற 32 பேர் கைது

தேனி மாவட்டத்தில் மது விற்ற 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-01 15:49 GMT
தேனி: 

தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். 

அப்போது ஆண்டிப்பட்டி அருகே அம்மாபட்டியில் மதுவிற்ற அதே ஊரைச் சேர்ந்த வைரம் (வயது 41), மேக்கிழார்பட்டி அருகே சிவக்குமார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 29 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கூடலூரில் மதுவிற்ற அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கரன் (43), கம்பம் பார்க் ரோட்டில் மது விற்ற ராஜா (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 32 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

அவர்கள் 4 பேர் உள்பட மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதுவிற்றதாக 32 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 227 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்