திருப்பூர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 1597 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 107ஆக உள்ளது.
இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 279ஆக உள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு தற்போது 873 பர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவுக்கு பலியாகவில்லை. இதனால் பலி எண்ணிக்கை 955ஆக உள்ளது.