விஜய் கல்விக்காக உதவி செய்வது வரவேற்கத்தக்கது - சரத்குமார்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.

Update: 2023-06-17 15:19 GMT

சென்னை,

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. சென்னை நீலாங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது ,

விஜய் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார். நடிகர்கள் பலரும் பொதுநல சேவைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். நானே கூட நடிக்க வந்த காலத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்துகொண்டிருக்கிறேன். அந்த வகையில் அவர் கல்விக்காக உதவி செய்திருக்கிறார். நல்ல விஷயம் .வரவேற்கத்தக்க ஒன்று தான் . என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்