ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!


ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
x

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

புதுடெல்லி,

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

இருநாட்டு தலைவர்கள் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனில் நிலவும் சூழ்நிலையில், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

2021 டிசம்பரில் அதிபர் புதினின் இந்திய பயணத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.குறிப்பாக, விவசாயப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்களில் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் ஊக்குவிக்கும் விதம் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

சர்வதேச எரிசக்தி மற்றும் உணவுச் சந்தைகளின் நிலை உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.உலகளாவிய மற்றும் இருதரப்பு விவகாரங்களில் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.


Next Story
  • chat