நேபாள நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு


நேபாள நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு
x

கோப்பு படம்

தினத்தந்தி 4 Nov 2023 1:48 AM GMT (Updated: 4 Nov 2023 2:57 AM GMT)

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நிலநடுக்க பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இரங்கலை வெளிப்படுத்தி உள்ளார்.

காத்மண்டு,

நேபாளத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தில், ருகும் மேற்கு பகுதியில் 36 பேர் உயிரிழந்தனர். இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

ஜஜர்கோட் பகுதியில் 34 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த சிலர் சுர்கெத் பகுதிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நிலநடுக்க பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இரங்கலை வெளிப்படுத்தி உள்ளார். அவர் நிலநடுக்க பாதிப்பு பகுதிகளை பார்வையிட புறப்பட்டு சென்றுள்ளார். இதுவரை நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்நிலநடுக்கம், டெல்லி-என்.சி.ஆர்., உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வடஇந்திய பகுதிகளிலும் உணரப்பட்டது.


Next Story
  • chat