குடிநீர் குழாய் உடைந்து வீணாக வாய்க்காலுக்கு செல்லும் தண்ணீர்


குடிநீர் குழாய் உடைந்து வீணாக வாய்க்காலுக்கு செல்லும் தண்ணீர்
x

குடிநீர் குழாய் உடைந்து வீணாக வாய்க்காலுக்கு செல்லும் தண்ணீர்

நாகப்பட்டினம்

திருவாரூர் மாவட்டம் ஒடாச்சேரி ஊராட்சியில் இருந்து குருக்கத்தி நீரேற்றும் நிலையம் மூலம் கீழ்வேளூர், ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக இரும்பு குழாய் மூலம் நாகப்பட்டினம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆழியூர் பிரிவு சாலை வளைவில் சங்கமங்கலம் வாய்க்கால் செல்கிறது. சில மாதங்களாக அந்த பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட வால்வு பகுதி உடைந்து, குடிநீர் வீணாகி வாய்க்காலுக்கு செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய்யை சரிசெய்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story