சத்தியமங்கலத்தில்அரசு டாக்டர் தற்கொலைகுழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீத முடிவு


சத்தியமங்கலத்தில்அரசு டாக்டர் தற்கொலைகுழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீத முடிவு
x

விபரீத முடிவு

ஈரோடு

சத்தியமங்கலத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் அரசு டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரசு டாக்டர்

திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மாற்றுப்பணி டாக்டராகவும் வேலை பார்த்து வந்து உள்ளார்.

இவருடைய மனைவி சந்தியா (29). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து கணவனும், மனைவியும் சத்தியமங்கலம் கோம்புபள்ளத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

குழந்தை இல்லை

திருமணம் முடிந்து 3 ஆண்டுகளாகியும் தனக்கு குழந்தைகள் இல்லையே என சதீஷ்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய உறவினர்களிடமும் ஏக்கத்துடன் கூறிவந்ததாக தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவி சந்தியா வெளியூர் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் சதீஷ்குமார் மட்டும் தனியாக இருந்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமாரிடம் சந்தியா செல்போனில் பேசி உள்ளார்.

தற்ெகாலை

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் அவர் சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் சந்தியா, அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து சதீஷ்குமாரை பார்த்து வரும்படி கூறினார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமாரின் வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்து உள்ளனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் என்ன?

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறுகையில், டாக்டர் சதீஷ்குமார், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம். எனினும் அவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தான் இந்த விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

அரசு டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story