முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ராதாபுரம் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 75). இவர் ராதாபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக இவர் கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்து வெளியே சென்று இருந்தார். இந்த நிலையில் சங்கரநாராயணன் அதே பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story
  • chat