மின்சாரம் தாக்கி அரசு பஸ் டிரைவர் பலி


மின்சாரம் தாக்கி அரசு பஸ் டிரைவர் பலி
x

கோட்டூர் அருகே மின்சாரம் தாக்கி அரசு பஸ் டிரைவர் உயிரிழந்தார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள குன்னியூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் வீரையன் (வயது 42). இவர் திருத்துறைப் பூண்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராசாத்தி (35) என்ற மனைவியும், காளிதாசன் (13) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று பணிமுடிந்து வீட்டுக்கு வந்த வீரையன் மதியம் வீட்டில் மின்வயரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மின்சாரம் பாய்ந்து சாவு

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story