வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது நீக்கம் - மின் உற்பத்தி தொடங்கியது


வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது நீக்கம் - மின் உற்பத்தி தொடங்கியது
x
தினத்தந்தி 1 May 2022 12:40 AM GMT (Updated: 1 May 2022 12:40 AM GMT)

வடசென்னை மற்றும் வல்லூர் அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தொ தொடங்கியுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல்மின் நிலையத்தின் 1-வது அலகில் கடந்த 26 ஆம் தேதி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த பழுது சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 

அதே போல் வடசென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள ஒன்றாவது நிலையின் 2-வது அலகில், கடந்த 28 ஆம் தேதி ஏற்பட்ட கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 

Next Story