அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை


அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
x

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பா.ம.க. இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சி தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து ஒவ்வொரு தொகுதிக்குமான வேட்பாளர்கள் பற்றி கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள், பா.ம.க.வை கொண்டுவர தமிழக பா.ஜனதா கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதேநேரம், அ.தி.மு.க.வும், பா.ம.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பா.ம.க.வும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Next Story