திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணை நிற்கும்: அமைச்சர் உதயநிதி

மக்களும் தி.மு.க. அரசுக்கு துணை நிற்பார்கள் என்பதை நிரூபித்து உள்ளீர்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2024-07-23 08:30 GMT

சென்னை,

சென்னை, புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2,124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது;

"மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும். மக்களும் தி.மு.க. அரசுக்கு துணை நிற்பார்கள் என்பதை நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற செய்து நிரூபித்து உள்ளீர்கள். இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த ஆடை அவசியம். இதனை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. இதன் அவசியம் அறிந்து 1970-ல் கலைஞர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தொடங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியமாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்."

இவ்வாறு அவர் பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்