4 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை... கணவர் இறந்த 2 நாளில் சோகம்

கடந்த 28-ந் தேதி அஜித்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-07-01 04:52 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே சொரகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், போலீஸ்காரர். இவருக்கும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி (வயது 23) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சர்வேஷ் (1), என்ற மகன் உள்ளார்.

தற்போது திவ்யபாரதி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி அஜித்குமார் திடீரென பூச்சி மருந்து (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் திவ்யபாரதி கடந்த 2 நாட்களாக கணவரை பிரிந்த மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யபாரதி தூக்குப்போட்டு கொண்டார். அப்போது அங்கு வந்த அவரது தாய் பாக்கியலட்சுமி இதனை பார்த்து கூச்சல் போட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் திவ்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் இறந்த 2 நாட்களில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்