திருமணம் செய்வதாக கூறி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்

யசோதரனுக்கு பெண் டாக்டருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது

Update: 2024-10-22 18:13 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் விஜய் யசோதரன். ஆயுதப்படை முகாமில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில் விஜய் யசோதரனுக்கு கொச்சியை சேர்ந்த ஒரு பெண் டாக்டருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியது.

தனக்கு திருமணம் ஆகவில்லை என்று விஜய் யசோதரன் பெண் டாக்டரிடம் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய பெண் டாக்டர், அவருடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் டாக்டரை திருவனந்தபுரத்துக்கு பல முறை வரவழைத்து விஜய் யசோதரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவரிடமிருந்து நகைகளையும் பறித்துள்ளார். இதற்கிடையே விஜய் யசோதரனுக்கு திருமணம் ஆன விவரம் அந்த பெண் டாக்டருக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து திருவனந்தபுரம் தம்பானூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஜய் யசோதரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்