கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் மாசிமக பெருவிழா தொடங்கியது

விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.;

Update:2025-03-03 17:02 IST
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் மாசிமக பெருவிழா தொடங்கியது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. நவக்கன்னிகள் தலமாக போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, பஞ்சமுர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், நந்தி பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதிஉலா வருகிற 10-ந்தேதியும், 11-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 12-ந்தேதி மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்