வயநாடு நிலச்சரிவில் இருந்து இதுவரை 1,386 பேர்... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி

வயநாடு நிலச்சரிவில் இருந்து இதுவரை 1,386 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் - பினராயி விஜயன்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், “அட்டமலை, சூரல்மலையில் முழுவீச்சில் மீட்புப்பணிகள், நிவாரணப்பணிகள் நடைபெறுகின்றன. உணவுப்பொருட்களை கொண்டு செல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது. ஒவ்வொருவராக செல்லும் வகையில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. LLH, M17 ஆகிய இரண்டு ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. கடலோர காவல் படையினர் உள்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

17 லாரிகள் மூலம் தேவையான உதவிப்பொருட்கள் சூரல்மலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.

கடந்த இரண்டு நாட்களில் 1,592 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் பலர் வரும் மணிநேரங்களில் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், நிலச்சரிவில் சிக்கித் தவித்த 1,386 பேர் மீட்கப்பட்டு 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 201 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 191 பேர் காணாமல்போய் உள்ளனர்.

மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்கள் மற்றும் 64 பெண்களும் உள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் மீட்பு குழுவினர் செல்ல தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மந்திரிகள் முகாமிட்டுள்ளனர். மருத்துவ முகாம்களில் கூடுதல் டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சூரல் மலை பகுதியில் மின்விநியோகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உறவுகளை இழந்தவர்களை மனரீதியாக தேற்றவேண்டியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். 

Update: 2024-07-31 12:00 GMT

Linked news