வயநாடு துயரம்: நிவாரண உதவிகளை வழங்க கேரள... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி

வயநாடு துயரம்: நிவாரண உதவிகளை வழங்க கேரள முதல்-மந்திரி வேண்டுகோள்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க விரும்புவோர் வழங்கலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்-மந்திரி நிவாரண நிதி மூலம் அரசு உதவிகளை செய்யும்.

வயநாடு பேரிடருக்காக முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்: Account No:67319948232, SBI, City branch, Thiruvananthapuram; IFSC: SBIN0070028.

நிவாரண உதவியாக பொருட்களை வழங்குவோர் 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். உபயோகப்படுத்திய பழைய பொருட்களை கொண்டு வந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். 

Update: 2024-07-31 09:04 GMT

Linked news