காசா போர் 'நீண்ட மற்றும் கடினமானதாக' இருக்கும் -... ... 23வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 9 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

காசா போர் 'நீண்ட மற்றும் கடினமானதாக' இருக்கும் - இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் தெற்கு நகரங்கள் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர். சுமார் 20 நிமிடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேல் நகரங்களை தாக்கின.

அதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் எல்லையோர நகரங்களுக்குள் ஊடுருவினர். அவர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுக்கொன்றனர்.

அதோடு நிற்காமல் பெண்கள், சிறுவர்கள் என 220-க்கும் அதிகமானோரை சிறைபிடித்து, காசா பகுதிக்கு கொண்டு சென்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய இந்த கொடூர தாக்கு தலில் இஸ்ரேல் நிலைகுலைந்தது.

இந்நிலையில் காசாவில் தரைவழித் தாக்குதல் முடுக்கிவிடப்படுவதால் போர் நீண்டதாகவும் கடினமாகவும் இருக்கும் என பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டெல் அவிவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, “காசா மீதான போர் "நீண்ட மற்றும் கடினமானதாக" இருக்கும். இஸ்ரேல் தனது தாக்குதலை மையமாக வைத்துள்ள வடக்கு காசா பகுதியை பாலஸ்தீனிய குடிமக்கள் காலி செய்யவேண்டும் . ஹமாஸ் பிடியில் உள்ள 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போரின் இரண்டாவது கட்டமாகும், அதன் இலக்குகள் தெளிவாக உள்ளன. ஹமாஸின் ஆட்சி, இராணுவ திறன்களை அழிப்பது மற்றும் பணயக்கைதிகளை வீட்டிற்கு கொண்டு வருவது” என்று அவர் கூறினார்.

Update: 2023-10-28 20:31 GMT

Linked news