காசா உடனான எல்லையை திறக்கும் எகிப்து

காசா உடனான எகிப்தின் ரபா எல்லையை திறப்பதாக எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் இடங்களில் தாக்குதல் நடத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கு எகிப்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

மனிதாபிமான உதவிகளுக்காக எகிப்து, கத்தார் மற்றும் ஐநா அமைப்புடன் ஹமாஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறது. மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹமாஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2023-10-12 11:00 GMT

Linked news