வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான... ... லைவ்: - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்...!

வடக்கு காசாவில் உள்ள மக்கள் 24 மணி நேரத்தில் அப்பகுதியை விட்டு வெளியேறி தெற்கு காசா பகுதிக்கு செல்லும்படி நேற்று மாலை இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்காக காசா எல்லையில் இஸ்ரேல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு காசாவில் பூமிக்கு அடியில் உள்ள சுரங்க பாதைகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் வடக்கு காசாவில் தாக்குதலுக்கு தயாராகி வரும் இஸ்ரேல் அப்பகுதியில் உள்ள மக்கள் தெற்கு பகுதிக்கு செல்லும்படி எச்சரித்துள்ளது. வடக்கு காசாவில் 10 லட்சம் பேர் வசித்து வரும் நிலையில் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி காசாவின் தெற்கு பகுதி மற்றும் எகிப்து எல்லைக்கு செல்லத்தொடங்கியுள்ளனர்.

Update: 2023-10-14 03:33 GMT

Linked news