இஸ்ரேல் மீது லெபனானில் இருந்தும் ராக்கெட்... ... இஸ்ரேலில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: மேகலயா முதல் மந்திரி தகவல்

இஸ்ரேல் மீது லெபனானில் இருந்தும் ராக்கெட் தாக்குதல் - அதிகரிக்கும் போர் பதற்றம்

இஸ்ரேலின் தெற்கு நகரங்கள் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு நேற்று முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் வடக்கு எல்லையான லெபனானில் இருந்து இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லெபனானில் எல்லையில் உள்ள இஸ்ரேலின் மவுண்ட் டொவ் பகுதியில் இந்த ராக்கெட் மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இஸ்ரேல் - லெபனான் எல்லையிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Update: 2023-10-08 06:27 GMT

Linked news