மாநிலங்களில் ஆட்சி கவிழ்வதற்கான சூழலை ஆளுநர்கள் உருவாக்க கூடாது - சுப்ரீம் கோர்ட்டு

Update: 2023-03-15 11:22 GMT

மாநிலங்களில் ஆட்சி கவிழ்வதற்கான சூழலை ஆளுநர்கள் உருவாக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பதே, மாநிலத்தில் ஆட்சி கவிழ்வதற்கான சூழலை உருவாக்கும் என்பதை ஆளுநர்கள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என சிவசேனா கட்சி தொடர்பான வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்