பாரா ஒலிம்பிக் : இந்திய வீரர் நிதிஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டி இன்று நடந்தது.

Update: 2024-09-01 16:24 GMT

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில்,பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்திய வீரர் நிதிஷ் - ஜப்பான் வீரர் டெய்சுகே புஜிஹாரா ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் குமார் 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்